முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Saturday, June 23, 2012

கண்டு கொள்ளப்படாத உண்மைகள்!

- மௌலவி,அ. முஹம்மது கான் பாகவி
(பித்அத்கள் பரவலாக்கப்படும் இந்த சூழலில் இது தேவை என்பதால் மறு பதிப்பு செய்யப்படுகிறது.)
வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பான் கார்டின் முக்கியத்துவம் ( PAN CARD )


நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...


பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.

Friday, June 22, 2012

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்


ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.
ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

Friday, June 15, 2012

பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா

உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வேண்டும்: மன்னருக்கு கடிதம்

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் மன்னர் அப்துல்லாவுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் சீனா உளவாளிகள் கைது: அதிர்ச்சி தகவல்


[ புதன்கிழமை, 13 யூன் 2012, 05:22.20 AM GMT +05:30 ]
இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊடுறுவிய 8 சீன உளவாளிகளை அம்மாநில பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் இருக்கும் மாநிலம் இமாச்சல் பிரதேசம்.
இங்குள்ள மாண்டி மாவட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீன நாட்டைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் பிடித்து விசாரரித்தனர்.
அவர்கள் சீன உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான சீன கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது பொலிஸாரின் பிடியிலிருக்கும் அவர்கள், தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


thanks: newindianews

Monday, June 11, 2012

முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்புப்பரிசு!

பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டதால் நமதூரைச்சார்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ / மாணவிகள் தக்க சான்றுகளுடன் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்களையோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புக்கொள்ளூமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தியும் தங்கள் பார்வைக்கு....

Friday, June 8, 2012

ஜும்ஆவும் 1 வருடத்தில் 145 கோடி நன்மைகளும்!

ஜும்ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் பள்ளி (தொழுமிடங்)களின் வாயில்களின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குமார்கள் அமர்ந்து முதல் நேரத்தில் வருபவர்கள்இ அதற்கடுத்த நேரத்தில் வருபவார்களைவறிசையாக எழுதுகிறார்கள்.
இமாம் (மிம்பறில்) அமர்ந்து விட்டால் (எழுதிய)தங்களது ஏடுகளை சுருட்டிக்கொள்கின்றனார்.

Wednesday, June 6, 2012

பதவி ஆசை கொடூரமானது, ருசி கண்டவர்களை அது விடாது!


முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் அந்த ஊர் என்றைக்கும் இல்லாமல் பரபரப்புடன் காணப்பட்டது. விசாரித்தபோது ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு ஓரிரு நாளில் நடைபெறப்போவதாக சொன்னார்கள். இரு கோஷ்டி தலைவர்கள் களம் காண்கின்றனர். அதனால்தான் இவ்வளவு பரபரப்பு என்றனர். தேர்தல் முடிந்து விட்டதா? என்று சிலநாட்கள் கழித்து விசாரித்தபோது போட்டி கடுமையாகி கலவரச்சூழல் ஏற்பட்டு குழப்பம் நிலவியதால் நிர்வாகம் செலற்றுப்போனதாக ஊர் மக்கள் கவலைப்பட்டனர்.

சுப்ஹானல்லாஹ்!!

இந்த அதிசயத்தை கடைசிவரை பொறுமையாக இருந்து பாருங்கள் இதிலிருந்தாவது நாம் படிப்பினை பெறுவோமா? மிருகங்களாக இருந்தாலும் எத்தனை பாசம் அல்ஹம்து லில்லாஹ். ஆனால் இன்று இஸ்லாமிய நாடுகள் ஒவ்வொன்றாக தாக்கப்படுகின்றன மற்ற அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் இந்த சமுதாயம ஒரு உடலைபோன்றது என்று. சமுதாயம் எங்கே போகிறது. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.