முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Saturday, March 5, 2016

நெய்வாசல் கடைத்தெருவில் இரு சக்கர வாகன விபத்து பெண் பலி, ஒருவர் கவலைக்கிடம்!


போஸ்ட் ஆபீசுக்கும் பள்ளிவாசல் தெருவுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் மயிலாடுதுறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மணல்மேடு அல்லது பட்டவர்த்தியை சேர்ந்த ஒருவர் எதிரே வந்த 1.C திருச்சிற்றம்பலம் பஸ்ஸின் அருகே மிக நெருக்கமாக சென்றபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவரின் சட்டை மாட்டி (பஸ்ஸின் முன் படிக்கு அருகில் பட்டை சற்று நீங்கியிருந்துள்ளது) அதில் தடுமாற்றம் ஏற்பட்டு பின்னால் அமர்ந்திருந்த அவர் ஊர்கார பெண் தவறி கீழே விழுந்து பஸ்ஸின் பின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

Thursday, March 3, 2016

நீடூர் நியாய விலை கடையின் அவல நிலை மாறுமா?

Mohammed Ameen's photo.
இது இன்று ஒரு நாள் நடக்கும் கூத்து அல்ல தினம் தினம் அரங்கேரும் காட்சி!
சிலக்கு நீடூர் அங்காடியை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் காரணம் அந்த (அ) நியாய விலை(எடை) கடையை நினைத்தால் அப்படித்தான் என்றால் அது மிகையல்ல.
எந்த நேரத்தில் என்ன பொருள் வழங்கபடும் என்று யாருக்கும தெரியாது காரணம் முன்கூட்டியே தெரிவித்தால் அனணவரும் வந்துவிடுவார்கள். பிறகு அணைவருக்கும் கொடுக்கவேண்டிவரும்.

Monday, January 12, 2015

ஜித்தா மாநகரில் மாபெறும் சிறப்பு நிகழ்ச்சி!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வருகிற 15.01.2015 வியாழன் மாலை செனாயிய்யாவில் சகோ. CMN சலீம் அவர்கள் உரையாற்றுகிறார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலதிக விபரங்கள் இணைப்பில்...
அன்புடன்ஹாஜா முஹ்யுத்தீன்0531 610 610 - 050 609 6740


Saturday, December 13, 2014

சபர் மாதம் பீடை மாதமா?

பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ
இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

Thursday, October 23, 2014

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஏற்கெனவே இதுபோல சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கானத்தூர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தையல் தொழிலாளி ஹுமாயூன், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

நேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ!


ஹைதராபாத் சஞ்சீவ் ரெட்டி நகரில் வசித்து வரும் ஷேக் லத்தீப் அலீ, B.Tech (Electrical) படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்முக்கு ரூ. 200 பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது தனது ATM அட்டையை இயந்திரத்தில் செருகிய பின்னர், பாஸ் வேர்டை அழுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த ATM இயந்திரத்தின் பாகங்கள் திறந்து கொண்டு அதிலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே வந்து கொட்டியுள்ளது.

சர்வதேசப்பார்வை (செய்திச்சுருள்)

நியூயார்க்கில் ‘ஹலால்’ இறைச்சிக்கூடம்



மூன்று அமெரிக்க முஸ்லிம்களின் முயற்சியால் நியூயார்க் நகரில், ஹலால் இறைச்சி விற்பனைக்காக, பாதுகாப்பான அறுக்கும் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமயம் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கவனத்தை இக்கூடம் ஈர்த்துள்ளது. மேன்ஹெடன் தெருவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இறைக்கட்டளைக்கேற்ப, தூய்மையான முறையில் அறுக்கப்படும் இறைச்சி தங்களுக்குக் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த இறைச்சிக்கூடத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இங்கு கால்நடைகள் இயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஹார்மோன்களோ செயற்கை கருத்தரிப்புகளோ கிடையாது. எனவே, முஸ்லிமல்லாத வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பைப் பெறுகிறது. இக்கூடத்தின் வாடிக்கையாளர்களில் 60 விழுக்காடு முஸ்லிமல்லாதவர்களே!

இதற்கிடையே, கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்டீகோ நகர முஸ்லிம் குடும்பங்களில் பலர், பள்ளிகளின் உணவுப் பட்டியலில் ஹலால் உணவையும் சேர்க்க வேண்டும் என்று கோரிவருகின்றனர். இஸ்லாமிய ஷரீஆ முறைக்கு ஏற்ற உணவுகள் பள்ளியில் இல்லாததால் மாணவர்கள் பள்ளி உணவுகளைத் தவிர்த்துவருகின்றனர்.

இதையடுத்து, சோமாலியாவைச் சேர்ந்த பிலால்மூயா ‘உணவு நீதி இயக்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். கல்வித் துறை பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முஸ்லிம்களும் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

பிராய்லர் சிக்கன் பிரியரா நீங்கள் அப்ப இதை முதலில் படியுங்கள்.

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்…

பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.

இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Sunday, August 31, 2014

உலகம் நடுங்கிய தினம்!


அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது.