முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Thursday, August 28, 2014

பால்காரர் முதல் பிளம்பர் வரை... பெண்களுக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை


சென்னை: பால்காரர் தொடங்கி பிளம்பர் என்று பலரையும் நேரடியாகச் சந்திக்கும் பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

Wednesday, August 27, 2014

நீடூரில் புதிய உதயம் "ஹபீப் நகர்"


நீடூர்  நெய்வாசல் பி.எம். நகர் கடைசியில் அஜீஸ் நகர் பின்புறமாக. ஏனாதிமங்களம் ரோட்டில் இருந்து  நஸ்ருல் முஸ்லிம் பள்ளி செல்லும் வழியில் உள்ளது.

மனையின் சிறப்பு அம்சங்கள்.
20 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்,
அருகிலேயே நஸ்ருல் முஸ்லிம் பள்ளிக்கூடம், மற்று அரசினர் பள்ளி,
மினி பஸ் வசதி,
மனையில் உடனடியாக வீடு கட்ட மின் இணைப்பு வசதி.
அகலமான சாலை வசதி மேலும் இன்னும் பல சிறப்பு அம்சங்கள். தேவைக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 31, 2014

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

- அபூ அப்துல்லாஹ் :
நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

நீடூர் நெய்வாசலில் நபிவழி திடல் தொழுகை!

நீடூர் நெய்வாசலில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பெருநாள் தொழுகையை நபிவழி திடல் தொழுகையாக நடத்தப்பட்டது. பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் களந்துகொண்டார்கள். நபிவழி தொழுகையில் ஆர்வம் உள்ள அனைவரும் ஆர்வமுடன் களந்துகொண்டார்கள்.

காலை சுமார் 7.30 மணிக்கு தொழுகை சலவாத் பாவா காலனியில் உள்ள தவ்ஹீது ஜமாத் மர்கஸ் வலாகத்தில் அமைந்துள்ள திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் புஹாரி அவர்கள் தலைமையில் தொழுகை நடைபெற்றது. அதை தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்தினார்.

புஹாரி அவர்கள் தனது உரையில் நேன்பு இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனுக்கு இறை அச்சம் ஏற்படுவதனால் மனித சமுதாயம் முழுவதும் எப்படி பயன் அடைகிறது. என்பதை அழககாக விளக்கினார்.

தொழுகை நடைபெரும் முன்பு சகோதரர் ரபியுதீன் அவர்கள் திடலுக்கு வருகை தந்து அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து சொல்லி சென்றார்கள்.
சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் களந்துகொண்டார்கள்.



நீடூர் முழுவதும் புதிய தார் சாலை போடும் வேலை நடைபெருகிறது!

                                                        Rice mill st

நீடூர் நெய்வாசல் மற்றும் கங்கணம்புத்தூர் முழுவதும் புதிய சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பும் இதுபோன்று சாலை அமைக்கும் பனி நடந்தாலும் தற்போது மிகவும் உறுதியன சாலைகள் போடப்படுகின்றன. இரண்டு முறை பெரிய கருங்கள் ஜல்லி போடப்பட்டு பிறகு தார் சாலை போடப்படுகிறது.

பெருநாள் வாழ்த்து!

அஸ்ஸலாமு அலைக்கும் அனைவருக்கும் எமது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்காள்!!

Saturday, June 23, 2012

கண்டு கொள்ளப்படாத உண்மைகள்!

- மௌலவி,அ. முஹம்மது கான் பாகவி
(பித்அத்கள் பரவலாக்கப்படும் இந்த சூழலில் இது தேவை என்பதால் மறு பதிப்பு செய்யப்படுகிறது.)
வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பான் கார்டின் முக்கியத்துவம் ( PAN CARD )


நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...


பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.